ஜம்மு கோயில்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்முவில் உள்ள கோயில்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை  எச்சரித்துள்ளது.

ஜம்மு கோயில்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தினத்தினை முன்னிட்டு டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அண்மையில் இன்டெல் உளவு அமைப்பு எச்சரித்தது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோல் ஜம்மு-காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நினைவு தினத்தன்றும், ஜெய்ஷ் இ முகமது மற்றும் லக்‌ஷர் இ தொய்பா ஆகிய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் இந்த தாக்குதல்களை அரங்கேற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கோயில்கள் உள்ள இடங்களில் டிரோன் கொண்டும் வெடிகுண்டுகளை வீச வாய்ப்புள்ளதால், ஜம்மு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதிகள் பிரபல ரகுநாத் கோவிலில் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.