மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க.வினர்... அடியாட்களை அனுப்பி ஆபாச பேச்சு...

சங்கராபுரம் அருகே மாற்றுத்திறனாளிபெண்ணிடம் அதிமுக பிரமுகர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க.வினர்... அடியாட்களை அனுப்பி ஆபாச பேச்சு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்துரு மனைவி மணிமேகலை இவர் ஒரு மாற்றுத்திறனாளி  இவருக்கு கயல்விழி, சுபிக்க்ஷா, என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் இளங்கலை பட்டம் முடித்து புதுப்பாலப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே அன்னை மருந்தகம்  என்ற பெயரில் (மெடிக்கல்) நடத்தி வருகிறார். 

அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கல்வராயன் மலை ஒன்றிய முன்னாள் வைஸ் சேர்மன் சித்ரா சேகர்மற்றும் மூர்த்தி, சுப்பராயன், சந்தரமூர்த்தி இந்த நான்கு நபர்களும் மணிமேகலையின் கடைக்குச் சென்று எங்கள் ஊரின் பொது இடத்தில் அருகில் தான் உங்கள் கடை உள்ளது என்று அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் இரவு நேரங்களில் அடியாட்களை  கொண்டு மிரட்டியதால் 2 வருடங்களுக்கு முன் ரூபாய் 35,000 கொடுத்துள்ளார்.

ஆனால், தற்போது எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டுமென அந்தப் பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். கொரனோ மற்றும் மழைக்காலம் என்பதால் கடையில் வியாபாரம் இல்லை என கூறியுள்ளார். அந்தப் பெண் தர மறுத்ததால் இரவு நேரம் கடைக்குச் சென்று அவர்களின் கடையின் முன் உள்ள இரும்பு தகர ஷெட்டை பிரித்து உடைத்தெரிந்துள்ளனர். பணம் தர மறுத்ததால் அந்த பெண்ணை ஆபாசமாக பேசியும் அடியாட்களை கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அந்த மெடிக்கலுக்கு சென்றால் செல்பவர்களை எல்லாம் நீங்கள் செல்லக் கூடாது எனவும் நீங்கள் சென்றால் உங்களை நாங்கள் நால்வரும் சேர்ந்துஊரை விட்டு தள்ளி வைத்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அந்த மெடிக்கலுக்கு பொதுமக்கள் யாரும் செல்வது இல்லை மேலும் இந்த சம்பவம் பற்றி மாவட்ட கலெக்டரிடம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மாற்றுத்திறனாளியான மணிமேகலை கூறியுள்ளார்.