என் மீது பழி போடுகிறார் முதலமைச்சர் ...எஸ்.பி.வேலுமணி...!!

முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் என் மீது பழி போடுகிறார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

என் மீது பழி போடுகிறார் முதலமைச்சர் ...எஸ்.பி.வேலுமணி...!!

காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகவும், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், 

திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் சொன்னதை எதுவும் செய்யாமல் வெறும் விளம்பரத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர் என்றும் நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது எந்த கட்டப்பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் என் மீது பழி போடுகிறார் என கூறுய அவர், நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் பல இயற்கை சீற்றங்கள் வந்தது. அப்போது மக்களை நேரடியாக சந்தித்து களப்பணியாற்றினோம். ஆனால் இப்போது அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் கொடுத்த திட்டங்களை திமுக நிறுத்தி வைத்துள்ளது என்றும்  சென்னையில் நாங்கள் தொடங்கிய வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. முழுமையாக வேலைகள் முடிக்கும் போது தண்ணீர் தேங்காது என கூறினார்.