பொங்கல் தொகுப்பு விநியோகம் எப்போது? நாளொன்றுக்கு அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பொங்கல் தொகுப்பு விநியோகம் எப்போது? நாளொன்றுக்கு அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். 

பொங்கல் தொகுப்பு: 

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 2 கோடியே19 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு அளிக்கப்படவுள்ளது. இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கரும்பு கொள்முதல் பணி தீவிரம்:

அரிசி, சா்க்கரை ஆகியவை நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 17 மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 

இதையும் படிக்க: களத்தில் இறங்கிய காளைகள்...முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்...எங்கே தெரியுமா?

நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்:

இந்நிலையில் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்க உள்ளார். இதைத் தொடா்ந்து, மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படவுள்ளது. 

நாளொன்றுக்கு எவ்வளவு அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும்:

முதலமைச்சர் நாளை தொடங்கி வைப்பதைத் தொடர்ந்து, முன்னதாக வழங்கப்பட்ட பொங்கல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமாா் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.