தமிழகத்தில் அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது காங்கிரஸ்....அண்ணாமலை....!

பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்து திமுக தான் முதலில் பேசி முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது காங்கிரஸ்....அண்ணாமலை....!

தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  

பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானதாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக செயல்பாடுகளை பார்க்கும்போது ஒரு மதத்திற்கு மட்டும் எதிராக செயலபடுகிறதோ என தோன்றுகிறது என்றார்.

தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவின் 'பி' டீமாக மாறிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது திமுகவை குறை கூறுவது போல்  அக்கட்சி மாநில தலைவர் அறிக்கைகள் விடுகிறார். பொதுவாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. திமுக சொல்வதை கிளிப்பிள்ளை போல் கேட்டு செயல்படுவதே காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பை பற்றி திமுகதான் முதலில் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். என தெரிவித்தார்.