அயோ! பா.. பா.. பாம்பு "பின்னி பிணைந்து நடனம்".. எங்க வச்சி?

குன்னூர் தேயிலை வாரிய அலுவலகத்தில் பின்னி பிணைந்த பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோ! பா.. பா.. பாம்பு "பின்னி பிணைந்து நடனம்".. எங்க வச்சி?

குன்னூரில் தென் மண்டல தேயிலை வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றி தோட்டங்களும் புதர்களும் அதிகளவு உள்ளன.

அப்போது திடீரென புதரிலிருந்து வெளியேறிய சாரை பாம்பு ஒன்று தேயிலை வாரிய அலுவலக வளாகத்தில் புகுந்து அங்குள்ள புல் தரையில் ஊர்ந்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் அதனை தேடி நாகப்பாம்பு ஒன்று புல்தரைக்கு வந்தது. பின்பு அவைகள் இரண்டும் பின்னி பிணைந்த நிலையில் நடனமாடின.

இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அச்சமடைந்தனர். பாம்புகள் பின்னி பிணைந்து இருக்கும் தகவல் காட்டு தீ போல் பரவியது. அங்கு வந்த பொதுமக்கள் அச்சத்துடன் அவைகளை பார்த்தனர். ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சுமார் 20 நிமிடம் அங்கிருந்த பாம்புகள் பின்னர் புதருக்குள் சென்று மறைந்தன.