திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது- ஜெயக்குமார் விமர்சனம்

இக்கட்டான மழைக்காலத்தில் திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது- ஜெயக்குமார் விமர்சனம்

இக்கட்டான மழைக்காலத்தில் திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு தங்களது இயலாமையை மறைக்க  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறி விசாரணை நடத்தப்படும் என கூறுவதாக தெரிவித்தார்.

4 நாட்களாக மழை வெள்ளத்தால் பொதுமக்கள் அவதியுறும் நிலையில்,  எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுவரை 600 கிலோ மீட்டர் தூரம் தான் தூர் வாரி இருப்பதாக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.