வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்மேறையீடு செய்யும்.. அமைச்சர் பொன்முடி

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்மேறையீடு செய்யும்.. அமைச்சர் பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேர்வு மையங்கள் வெகு தூரத்தில் உள்ள காரணத்தினால் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி விரிவுரையாளர்களுக்கான தேர்வு டிசம்பர் 8ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என்றார்.

நவம்பர் மாதத்தில் வங்கி தேர்வு மற்றும் நெட் தேர்வு நடப்பதால் இந்த தேர்வை டிசம்பர் 8-ஆம் தேதி நடத்தவுள்ளதாகவும், தேர்வர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்  குறிப்பிட்டுள்ளார். 

மேலும் , வன்னியர்களுக்கான 10. 5% இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்மேறையீடு செய்யும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இடஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.