தமிழகத்தில் முதன் முறையாக இ-அலுவலக நடைமுறை துவக்கம்...! எந்த இடத்தில் தெரியுமா?

தமிழகத்தில் முதன் முறையாக இ - அலுவலக நடைமுறையை  நீலகிரி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதன் முறையாக இ-அலுவலக நடைமுறை துவக்கம்...! எந்த இடத்தில் தெரியுமா?

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்கள் கொண்டு ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு இ-அலுவலகம் திட்டத்தை உருவாக்கியுள்ளது .

இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவக்கி வைத்தார். இ-அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும் என நம்பப்படுகிறது.  இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும் என ஆட்சியர் SP அம்ரித் தெரிவித்தார்.

இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி ப்ரியாதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.