கல்லூரிகளில் இனி திருநங்கையருக்கு இலவச இடம்...சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!!

அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கையருக்கு இலவச இடம் வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கல்லூரிகளில் இனி திருநங்கையருக்கு இலவச இடம்...சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி முடிவு!!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையரை இலவசமாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் 3-ம் பாலினத்தவருக்கு தலா ஓரிடம் வழங்கப்படவுள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் தந்தவுடன், வரும் கல்வியாண்டில் இது அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்கள் படித்து வரும் நிலையில், 3-ம் பாலினத்தவருக்கும் இலவச இடம் வழங்கவுள்ளது.