காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்... மாப்பிள்ளைக்கு 21 வயது ஆகவில்லை...

குளச்சலில் மாப்பிள்ளைக்கு 21 வயது ஆகாததால், அவரது திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்... மாப்பிள்ளைக்கு 21 வயது ஆகவில்லை...

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் அஸ்வின் ஜீனோ, கடந்த 2 ஆண்டுகளாக குளச்சலை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளார். இதனை தொடா்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குளச்சலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்கு ஆணின் திருமண வயது 21-ஐ தாண்டி இருக்க வேண்டும். ஆனால் மாப்பிள்ளைக்கு இன்னும் திருமண வயதை அடையவில்லை என்ற தகவலை, மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி மற்றும் போலீசாருக்கு மணமகனின் தாயார் கொடுத்துள்ளார். உடனே சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், மாப்பிள்ளைக்கு 20 வயது தான் ஆகிறது என்பதை உறுதி செய்து, வாலிபருக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.