மாரடைப்பால் உயிரிழந்த திருமகன் ஈவேராவின் உடல் தகனம்...!

மாரடைப்பால் உயிரிழந்த திருமகன் ஈவேராவின் உடல் தகனம்...!

மாரடைப்பால் உயிரிழந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் உடல் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திருமகன் ஈவேரா காலமானார்:

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர், எதிர்கட்சி  தலைவர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்தனர். 

தலைவர்கள் இரங்கல்:

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திருமகன் ஈவேரா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படிக்க: குடியரசு தின விழா நடத்துவதில் சிக்கலா?

அதேபோன்று, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி, முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, அன் பில் மகேஷ், திமுக எம். பி. கனிமொழி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். 

காங்கிரஸ் தலைவர்கள் கேஎஸ் அழகிரி திருநாவுக்கரசர் மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் ஈவிகேஎஸ் குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்தனர். 

இறுதி ஊர்வலம்:

தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு திருமகன் ஈவெரா உடல் இறுதி ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், கே எஸ் அழகிரி, தங்கபாலு, ஜோதிமணி உட்பட  ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். 

ஈ.வெ.ரா உடல் தகனம் :

இதையடுத்து  கருங்கல்பாளையம் கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்கு செய்து, அங்குள்ள மின் மயானத்தில் திருமகன் உடல் தகனம் செய்யப்பட்டது.