கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.. அஞ்சலி செலுத்துவதற்கு குவிந்த கிராம மக்கள்!!

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.. அஞ்சலி செலுத்துவதற்கு குவிந்த கிராம மக்கள்!!

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கிராம மக்கள் திரண்டு வந்து மாணவிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாணவியின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி:

அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர், தனி வாகனம் மூலம் பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மாணவியின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களும், கிராம மக்களும் திரண்டு வந்து மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

போலீசார் குவிப்பு:

இன்று காலை 11 மணிக்குள் மாணவியின் இறுதி சடங்கை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மாணவியின் சொந்த கிராமத்தில் ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.