சிறுமிக்கு குழந்தை; சிறுவனுக்கு காப்பு  

திருப்புத்துார் அருகே, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 17 வயது சிறுவனையும், சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு குழந்தை; சிறுவனுக்கு காப்பு   

திருப்புத்துார் அருகே, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 17 வயது சிறுவனையும், சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் பகுதி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 1 படிக்கிறார். இவர் உடன் படிக்கும் ஒரு மாணவனுடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார். இந்த நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் கர்ப்பமடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து 'ஸ்கேன்' செய்தபோது குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைந்திருந்தது தெரிந்தது.  பின்னர் சிறுமியின் தந்தை, அத்தை ஆகியோர், சிறுமியை திருப்புத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தனர்.

தொடர்ந்து குழந்தையை மருத்துவமனை பணியாளர் ஒருவர் மூலம், குழந்தை இல்லாத பெண் ஒருவரிடம் வளர்க்க கொடுத்துள்ளனர். தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சைமன் ஜார்ஜ், திருப்புத்துார் மகளிர் போலீசில் புகார் செய்தார்.  இதையடுத்து, சிறுவன், சிறுமியின் தந்தை, அத்தை, மருத்துவர், மருத்துவ பணியாளர், குழந்தையை வளர்த்தவர் என ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுவன் மற்றும் சிறுமியின் தந்தை கைது செய்தனர். பின்னர் குழந்தை, மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்திலும், சிறுமி, மகளிர் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.