நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் முழ்கி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பாலாற்றில்   நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 11  வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் முழ்கி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த  கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சர்வன்  (11). இவர் காட்டுக்கொல்லை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார் . பள்ளி விடுமுறையில் மாணவன் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வரும் நிலையில், இன்று தனது  நண்பர்களுடன் அருகிலுள்ள பாலாற்றில் செல்லும் வெள்ள நீரில் குளிக்க சென்றுள்ளார்

ஆற்றில் நண்பர்களுடம் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால், பதறி போன சக நண்பர்கள் இது குறித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் முழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.