குழந்தையின் மீது 2 முறை ஏறியிறங்கிய கார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் மீது 2 முறை ஏறியிறங்கிய கார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் அதே பகுதியில் அயன் கடை நடத்தி வருகிறார். இவரது  2 வயது மகன் தருண் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த காரை ஓட்டுனர் திருப்புவதற்கு முயன்றுள்ளார்.

அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென்று காரின் பின்புறம் வந்துள்ளார். ஓட்டுனர் காரை திருப்ப முயன்றபோது திடீரென்று குழந்தை காரின் பின்புறத்தில் மோதி கீழே விழுந்துள்ளது. இதை அறியாமல் ஓட்டுனர் காரை திருப்ப முயன்று உள்ளார். இதனால் குழந்தையின் மீது கார் இருமுறை ஏற்றி இறங்கி உள்ளது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே கார் ஓட்டுனர் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தியுள்ளார். உடனடியாக பொதுமக்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது சம்பந்தமாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.