சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம்... சோதனைகள் தொடரும் - சுகாதாரத்துறை இணை இயக்குனர்

சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களில், சோதனைகள் தொடரும் என்றும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம்... சோதனைகள் தொடரும் -  சுகாதாரத்துறை இணை இயக்குனர்

ஈரோட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, சிறுமியின் கருமுட்டையை விற்ற தாயின் செயல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சிறுமி அளித்த தகவலின் பேரில், ஈரோடு, சேலம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர், கருமுட்டை விற்பனை குறித்து ஆய்வு மேற்க்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சிறுமி குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், மருத்துவமனைகளில் சோதனை தொடரும் என்றும், பிற மாநிலங்களில் விற்பனை செய்தது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.