தேனியில் அடக்கம் செய்ய முயன்ற போது உயிர் பிழைத்த குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறி ஒப்படைக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்ய முயன்ற போது உயிர் பிழைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. 

தேனியில் அடக்கம் செய்ய முயன்ற போது உயிர் பிழைத்த குழந்தை இன்று  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த பரிதாபம்...

பெரியகுளம் அருகேயுள்ள தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன் - பாத்திமாமேரி தம்பதி. பாத்திமா மேரிக்கு நேற்று முன் தினம் தேனி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது , குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையை பெரியகுளம் கொண்டு சென்ற உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற போது, குழந்தை உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து குழந்தை மீண்டும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இறந்ததாக சொல்லப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக தெரிவித்த, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.