சாட்சி சொல்லும் சம்மனை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர்..பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம்!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சி சொல்லும் சம்மனை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர்..பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம்!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2011, 2012 ஆம் ஆண்டுகளில், காவல் ஆய்வாளராக இருந்த சிவசங்கரன், தற்போது நாமக்கல் மாவட்டம் வேல்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு தனியார் பள்ளியின் நிலம் சம்பந்தமாக தொடரப்பட்ட மோசடி வழக்கில் சாட்சி சொல்ல பலமுறை சம்மன் அனுப்பியும் சம்மனை வாங்க மறுத்துள்ளார்.

இதனால், காவல் ஆய்வாளர் சிவசங்கரனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.