சென்னையில் மேலும் 175 பேருக்கு தொற்று...கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைவு...

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 175 பேருக்கு தொற்று...கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைவு...

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து ஏழாயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் மேலும் 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்த ஆயிரத்து 816 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18 ஆயிரத்து 69 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிகபட்சமாக நேற்று கோவையில் 216 பேருக்கும், அடுத்தபடியாக சென்னையில் 175 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.