திருமண ஆசை காட்டி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம்... காதலன் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி...

திருமண ஆசை காட்டி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்த காதலன் கை விட்டதால் மனம் உடைந்த இளம் பெண் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஆசை காட்டி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம்... காதலன் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி ராதா மற்றும் மகன் இளங்கோ,மகள் திவ்யா  ஆகியோருடன் குடியிருந்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். பழனிச்சாமி ராதா தம்பதியினரின் மகளான திவ்யா ஆசிரியர் பயிற்சி கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

இதற்கிடையில் திவ்யாவிற்கு அவரது தூரத்து உறவுமுறையான காங்கேயம் எல்லப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து வசந்தா தம்பதியின் மகனான பார்த்திபன் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திவ்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பொறியியல் பட்டதாரியான பார்த்திபன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று  தங்கி உடலுறவு கொண்டதாகவும், ஜோடியாக புகைப்படங்களை எடுத்து கொண்டு நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

விடிய விடிய செல்போனில் மாறி மாறி பேசிக்கொண்டிருந்த நிலையில் கர்ப்பமாகிய திவ்யாவை அழைத்துச்சென்ற  பார்த்திபன், காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாத்திரை வாங்கி கொடுத்து கரு கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திவ்யாவின் அழைப்பை கடந்த சில நாட்களாக பார்த்திபன் ஏற்க மறுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தன்னுடன் நெருங்கி பழகி  கர்ப்பமாக்கி கரு கலைப்பும் செய்யவைத்து காதலித்து திருமண ஆசை காட்டி செல்போன் அழைப்பை ஏற்க மறுத்த காதலன் பார்த்திபன் மீது பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இளம்பெண் திவ்யா புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட பல்லடம் மகளிர் போலிசார் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இன்று, நாளை என அலைகளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் புகார் கொடுத்து 5-ம் நாளான இன்றும் மகளிர் போலிசார் நாளை விசாரணைக்கு வருவதாக இளம்பெண் திவ்யாவிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

கர்ப்பமாக்கிய காதலன் கை விட்டது ஒருபுறம் பல்லடம் மகளிர் போலிசார் அலைகழிப்பு மறுபுறம் என மிகுந்த மனவேதனை உடன் இருந்தாக கூறப்படும் இளம்பெண் திவ்யா தான் மறைத்து கொண்டு வந்திருந்த சாணி பவுடர் கரைசலை காவல் நிலைய வளாகத்திலேயே குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இளம்பெண்ணின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த மகளிர் போலீசார் மற்றும் அப்பெண்ணின் உறவினர்கள் உடனடியாக பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலிசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக இளபெணிண் காதலன் பார்த்திபன் மற்றும் குடும்பத்தாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.