கோவில் மணியை அடிக்கும் நாய்... சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

நாகை அருகே தெருநாய் ஒன்று கயிற்றை வாயால் கவ்விக்கொண்டு கோவில் மணி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவில் மணியை அடிக்கும் நாய்... சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம்  வடக்கு பாலத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லப கணபதி ஆலயத்தில்  தெருநாய் ஒன்று கயிற்றை வாயால் கவ்விக்கொண்டு கோவில் மணியை அடிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அப்பகுதியிலுள்ள ஸ்ரீவல்லப கணபதி ஆலயம் அருகே தினமும் அந்த பகுதியில் உள்ள தெருநாய் ஒன்று தூங்குவது வழக்கம். இந்நிலையில் கோவில்  மணிமண்டபத்தில் உள்ள மணியின் கயிற்றை வாயால் கவ்விக் கொண்ட அந்த தெரு நாய் கடந்த இரண்டு தினங்களாக கோவில் மணியை அடித்து வருகிறது.

தெருநாய் ஒன்று கோவில் மணியை அடிக்கும் காட்சியை அந்தப் பகுதியில் தொப்பி கடை வைத்திருக்கும் சுதாகர் என்பவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்.