பழுதான வாகனத்தை ஓட்டுவதற்கு தந்து, தன் உயிருக்கு ஆபத்து விளைவிக்க பார்ப்பதாக அரசு ஓட்டுநர் புகார்..!

பழுதான வாகனத்தை ஓட்டுவதற்கு தந்து, தன் உயிருக்கு ஆபத்து விளைவிக்க பார்ப்பதாக  அரசு ஓட்டுநர் புகார்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில்-திருநெல்வேலி இடையே பழுதான அரசு பேருந்தை,  போக்குவரத்து அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு ஓட்டுனர் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் - திருநெல்வேலி இடையே இயங்கும் பழுதான அரசு பேருந்தை வட்டார வாகன போக்குவரத்து அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு ஓட்டுனர் புகார். பழுதான வாகனத்தை ஓட்டுவதற்கு தந்து தன் உயிருக்கு ஆபத்து விளைவிக்க போக்குவரத்துக் கழக நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு .

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள ராணித் தோட்டம் ஒன்றாவது பணிமனையின் கட்டுப்பாட்டில் T.N 74 எண்- 1841 என்ற பதிவெண் கொண்ட பேருந்து திருநெல்வேலி நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கி வருகிறது.

இந்தப் பேருந்தை ஓட்டுநர் பெர்க்மான்ஸ் ஓட்டி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பேருந்தை இவர் ஓட்டி வரும் நிலையில் சில நாட்களாக பேருந்து பழுதான நிலையில் காணப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் அவர் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று விட்டு மீண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது பஸ்ஸில் பிரேக் பிடிக்கவில்லை வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது இடது பக்கம் திரும்பினால் வலது பக்கம் செல்கிறது; என்றும், 

இதனால் ஓட்டுவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டது என்றும் கூறி,  நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு நிறுத்திவிட்டு சாலை போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்தார்.

இது குறித்த வீடியோ வெளியிட்டார். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க   | அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!