கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்.. கிராம மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி

கடலூரில் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்.. கிராம மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி

நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏ.குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த 5 சிறுமிகள் உட்பட 7 பேர் கிராமத்திற்கு அருகே உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணை கரையோரம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உடல்கள் சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் கிராமத்தில் 5 பெண்களின் உடல்களும் ஒரே இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கிராம மக்கள் அனைவரும் உயிரிழந்தவர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மற்ற இருவரின் உடல்கள் அவர்களது சொந்த கிராமமான குறிஞ்சிப்பாடி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.