மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் - சசிகலா

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மத்திய அரசு உடனடியாக உரிய நிதியுதவியை மாநில அரசிற்கு வழங்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் - சசிகலா

சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக அரசு தற்போது மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நன்கு உணர்ந்து, வரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மழைநீரால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.