காக்கி உடையில் கம்பீரமாக வந்த முன்னாள் எஸ்.ஐ-ன் பேரன்; இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த காவல் ஆணையர்!

காக்கி உடையில் கம்பீரமாக வந்த முன்னாள் எஸ்.ஐ-ன் பேரன்; இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த காவல் ஆணையர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பணிஓய்வு பாராட்டு விழாவுக்கு வந்த முன்னாள் சிறப்பு ஆய்வாளரின் பேரனை ஆவடி காவல் ஆணையர் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது செங்குன்றம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சாரலாதன் தனது 4 வயது பேரன் பிரணவ் சாயை காக்கி உடையில் கம்பீரமாக அழைத்து வந்தார்.

இதனைக் கண்ட ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆசையாய் சிறுவனை தூக்கி வந்து தனது இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார்.