பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர் தலைமறைவு..!

தலைமை ஆசிரியரை பிடிக்க விரைந்தது தனிப்படை..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர் தலைமறைவு..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி 
பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திசையன்விளையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் டயோசீசன் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தலைமை ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக 
தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் கொடுமைகள் நிகழ்வதாகவும், கடுமையான தண்டனைகள் மூலம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.