பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம்.. ஆர்ப்பாட்டத்தில் மக்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் பெரியார் சிலை இரண்டாவது முறையாக சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம்.. ஆர்ப்பாட்டத்தில் மக்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது பெரியார் படிப்பகம். இதன் அருகில் பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது.

இந்த  நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலையில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையிலும் முகம் மூக்கு அமைக்கப்பட்ட பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அதை அறிந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையை சுற்றி கம்பிவேலி இருந்தும், கம்பிவேலியை உடைத்து அதற்குள் இருந்த சிலையை சேதப்படுத்தியுள்ளனர் மர்ம நபர்கள்.

பெரியார் சிலை சேதப்படுத்தி உள்ள தகவல் அறிந்த திமுக மற்றும் சீக்கா அமைப்பைச் சார்ந்தவர்கள் சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜர் வீதியிலுள்ள பெரியார் சிலை கனரக வாகனம் மூலம் இடிக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.