காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி... பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்...

ஓமலூரை அருகே திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. ஒரே சமுதாயத்தினர் என்பதால் இரு பெற்றோர்களையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி... பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்...

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் பார்த்திபன். இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த காவேரி மகள் தவமணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கல்லூரி செல்லும்போது மலர்ந்த காதல், படிப்பை முடித்த நிலையிலும் தொடர்ந்துள்ளது. இதையறிந்த இரு தரப்பு பெற்றோர்களும், வெவ்வேறு இடத்தில் பெண் பார்க்கவும், மாப்பிள்ளை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

இதையறிந்த பார்த்திபன், தவமணி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்று கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று மதியம் பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம்டைந்தனர். இதனை தொடர்ந்து தொளசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஈஸ்வரன், இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசினார். இதையடுத்து காதல் ஜோடியின் திருமணத்தை இரண்டு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுகொண்டனர். இதையடுத்து தனது காதல் மனைவியை பெற்றோர் சம்மதத்துடன் பார்த்திபன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.