சுற்றுப்புறப்பகுதிகளி தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்...!

பாக்கம் கிராமத்தில் அமைச்சர் பாடல் பாடியும்,பள்ளி வளாகத்தை பெருக்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

சுற்றுப்புறப்பகுதிகளி தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்...!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த, பாக்கம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக அரசு பள்ளியில் ' நம்ம ஊரு சூப்பரு ' என்ற தலைப்பின் கீழ் கிராம பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் வைத்துக்கொள்ள நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலந்து கொண்டு கிராம பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள உள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.