தேனியில் இறந்ததாக கூறப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்...

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பெண் குழந்தை அடக்கம் செய்ய போகும் நேரத்தில் திடீரென குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் இறந்ததாக கூறப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்...

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் பாத்திமா மேரி என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு அதிகாலை 3 மணி அளவில் பெண் குழந்தை பிறந்த நிலையில், பிறக்கும் போதே இறந்தே பிறந்ததாக கூறி மருத்துவர்கள் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனால்  கதறி துடித்த  உறவினர்கள் பின்னர் குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். துணியால் சுற்றி எடுத்து செல்லப்பட்ட  குழந்தையை அடக்கம் செய்வதற்காக துணியை எடுத்ததில் குழந்தை திடீரென கண் திறந்து பார்த்துள்ளது. இதனால் பரவசடைந்த உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததுடன் குழந்தையை மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  கொண்டு சென்று அனுமதித்தனர்.

உயிருடன் பிறந்த குழந்தையை சரியாக பரிசோதிக்காமல் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.