அட்டகாசம் செய்து வந்த குரங்குகள்.. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்!!

நெல்லை மாவட்டம் பணகுடியில் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

அட்டகாசம் செய்து வந்த குரங்குகள்.. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்!!

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்த இரண்டு குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்து றையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக் குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் பணகுடி சூசையப்பர் வடக்கு ரதவீதியில் நேற்று கூண்டு வைத்தனர்.  அதில் இன்று காலையில் இரண்டு குரங்குகளும் சிக்கின. இரண்டு  குரங்கையும்  வனத்துறையினர் பிடித்து பணகுடி காட்டுக்குள் கொண்டு விட்டனர்.