மகன் வயது இளைஞருடன் ஓட்டம்பிடித்த தாய்...! வாய்ஸ் மெசேஜால் பதறிய கணவர்..!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் முகநூலில் ஏற்பட்ட கள்ளக்காதலால், திருமண வயதுடைய 2 மகன்களை தவிக்க விட்டு 25 வயது இளைஞரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

மகன் வயது இளைஞருடன் ஓட்டம்பிடித்த தாய்...! வாய்ஸ் மெசேஜால் பதறிய கணவர்..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயது. இந்த தம்பதியினருக்கு 22 வயது மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அந்த குடும்ப தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். மகன்களின் படிப்பிற்காக அந்த பெண், தங்கள் கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். 

மகன்கள் இருவரும் வேலை, படிப்புக்காக தினமும் பகல் முழுவதும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருந்த அந்த பெண் முகநூல் மூலம் பல்வேறு நண்பர்களுடன் தனது நேரத்தை செலவிட தொடங்கினார். பல்வேறு நண்பர்களுடன் நட்பு இருந்தாலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.பல நாட்களாக முகநூல் மூலமே பேசிக்கொண்டிருந்த இருவரும் சந்திக்க தொடங்கினர். அதற்கு அந்த பெண்மணியும் பச்சைக்கொடி காட்டியதையடுத்து, அந்த வாலிபர் தனது சொந்த ஊரில் இருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஒரத்தநாட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த அந்த வாலிபர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்து தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது அந்த பெண் கர்ப்பிணியாக உள்ளார்.

கள்ளக்காதலை மறைத்த தன்னால், தனது வயிற்றில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் சென்று குடும்பம் நடத்த முடிவு செய்தார். தனது மகன்களுக்கு விவரம் தெரியும் முன்னரே, கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த அந்த பெண், தனது கணவர் சம்பாதித்த பணத்தில் வாங்கிய நகைகள் மற்றும் பணத்துடன் கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் மாயமானார். 

இந்த நிலையில் காலையில் எழுந்த அந்த பெண்ணின் மகன்கள் வீட்டில் தனது தாயாரை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெளிநாட்டில் உள்ள தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த பெண்ணின் மூத்த மகன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றர். மேலும் அந்த பெண், ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் அதனுடன் சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் வெளிநாட்டில் உள்ள தனது முதல் கணவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளார். அதில், தான் ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருடன் தான் குடும்பம் நடத்த உள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.