தாய் வீட்டுக்கு சென்ற மனைவிக்கு கரு கலைந்ததால் வேதனை : மன உளைச்சலில் விஷம் குடித்த கணவர்!!

நாகை அருகே மனைவியின் கர்ப்பம் கலைந்தது குறித்து கேள்விப்பட்டு விஷம் குடித்த பட்டதாரி  கணவர்.

தாய் வீட்டுக்கு சென்ற மனைவிக்கு கரு கலைந்ததால் வேதனை : மன உளைச்சலில் விஷம் குடித்த கணவர்!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அர்ஜூனா. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு வேளாங்கண்ணி அருகே பரவை மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார். அர்ஜூனா கோவையில் படித்த போது கோவையைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மனைவியுடன் அர்ஜூனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்குபொய்கைநல்லூரில் உள்ள தனது தாத்தா சோமசுந்தரம் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் கீர்த்தனா கர்ப்பம் அடைந்தார். கடந்த டிசம்பர் மாதம் கீர்த்தனாவின் தாய் சித்ரா தெற்கு பொய்கைநல்லூர் வந்தார். மகளுடன் சமாதானம் பேசி கோவைக்கு அழைத்து சென்றார். அப்போது வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷனில் கீர்த்தனாவின் உயிருக்கும் குழந்தைக்கும் எந்தவிதமான பாதிப்பும் வராமல் பார்த்து கொள்கிறேன் என தாய் சித்ரா எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்து விட்டு சென்றார்.

நீண்ட நாட்களாக கீர்த்தனா தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அர்ஜூனா  போனில் தொடர்பு கொண்டார். அப்போது கர்ப்பம் கலைந்து விட்டதால் பேசவில்லை என கூறினார். உடனே அர்ஜூனா வேளாங்கண்ணி போலீஸ்ஸ்டேசன் சென்று மனைவியை மீட்டு தரும்படி புகார் செய்த அர்ஜூனா வீட்டுக்கு வந்ததும் விரக்தியில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.