சாலையில் கிடந்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டி...

பொள்ளாச்சியில் துப்பாக்கி ஒன்று சாலையில் கிடந்ததாகக்கூறி அதனை மூதாட்டி ஒருவர் போலீசாரிடம் ஒப்படைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாலையில் கிடந்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டி...

கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் பொள்ளாச்சிக்கு தனது மகளை பார்க்க வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற போது சாலையில் துப்பாக்கி கிடப்பதை பார்த்த அவர் உடனடியாக அதனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் பொள்ளாச்சிக்கு கூலிப்படையினர் யாரேனும் வந்துள்ளார்களா?, கொள்ளையர்கள் யாரேனும் விட்டுச் சென்றதா?  என்ற கோணத்தில்  டி.எஸ். பி. தமிழ்மணி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.