அதிமுக பொதுக்குழு வழக்கு : 3 வது நாள் விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு சொன்னது என்ன?

அதிமுக பொதுக்குழு வழக்கு : 3 வது நாள் விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு சொன்னது என்ன?

அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றியமைக்கப்பட்டு  நடத்தப்பட்ட பொதுக்குழுவை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை:

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.  இன்று 3 வது நாளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: என்.எல்.சிக்கு எதிராக...2 நாட்கள் எழுச்சி நடைபயணம்... அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:

அதில் கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யபட வேண்டும் என எம்ஜிஆர் உருவாக்கிய விதிகளை யாராலும் மாற்ற இயலாது. ஆனால், கட்சி விதிகளை எல்லாம் அவசர கதியில் பழனிசாமி தரப்பினர் மாற்றியுள்ளதாகவும், அ.தி.மு.க.வின் அடிப்படை நோக்கமே மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.  

வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்:

அதேபோன்று, தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை என கூறிய ஓ. பி. எஸ். தரப்பினர் தனி மனிதனின் சுயநலத்துக்காகவும், பதவி வெறிக்காகவும் கட்சியை பலி கொடுக்கிறார்கள் என்றும் வாதிட்டனர். வாதங்களை எல்லாம் கேட்டறிந்த நீதிபதிகள், பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.