சிகிச்சைக்கு வந்த நோயாளி "ஆஸ்பத்திரி மாடியில்" இருந்து குதித்து தற்கொலை.. செங்கல்பட்டில் வினோதம்!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்கு வந்த நோயாளி "ஆஸ்பத்திரி மாடியில்" இருந்து குதித்து தற்கொலை.. செங்கல்பட்டில் வினோதம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான அன்பரசனுக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்துள்ளது.

இதனால் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அன்பரசன் திடீரென மருத்துவமனையில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து அன்பரசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அன்பரசன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்கு வந்த நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.