வானதி சீனிவாசன் அலுலகத்துக்குள் புகுந்த நபர் சடலமாக மீட்பு..! என்ன நடந்தது..? வெளியான சிசிடிவி காட்சிகள்...!

வானதி சீனிவாசன் அலுலகத்துக்குள் புகுந்த நபர் சடலமாக மீட்பு..!  என்ன நடந்தது..? வெளியான சிசிடிவி காட்சிகள்...!

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றார். நேற்று மாலை 5:50 மணி அளவில் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார். கதவை சாத்திய மர்மநபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் பிடித்து  வெளியேற்றினார். மேலும்  இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்மநபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே, அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த அந்த  நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது . குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது  வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும் , அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்க, அலுவலகத்திற்குள் புகுந்த அந்த  நபர் அவினாசி சாலையில் அரசு பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி வீடியோ காட்சிகளை  காவல்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள்   நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் அறையின் கதவை உட்புறமாக பூட்ட முயற்சித்த நிலையில் அலுவலகத்தில் இருந்த அலுவலகப் பணியாளர்  அந்த மர்மநபரை வெளியேற்றினார்.


 
பின்னர், அந்த மர்ம நபர் மீது சந்தேகம் உள்ளது என பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே அதே மர்ம நபர் பாஜக அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அவிநாசி சாலையில் வாகனம் மோதி உயிரிழந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மர்ம நபர் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சியில் அந்த மர்ம நபர் சாலையைக் கடந்து வந்து எதிர்ப்புறமாக வந்த அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், ஆனால் பேருந்து ஓட்டுநர் இவர் வந்ததை கண்டு பேருந்தை திருப்பிட பேருந்தின் பின்புற சக்கரத்தில் அடிப்பட்டு காயமடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை  காப்பாற்ற முயற்சித்து தூக்கிய போது நடக்க முடியாமல் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அச்சமயம் அவர் உயிரிழந்திருக்க கூடும் என தெரிகிறது. 

தற்போது வரை உயிரிழந்தவர் யார் என தெரிய வராத நிலையில் போலீசார் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க     | ராஜிவ் காந்தி கொலை வழக்கு: மகனை மீட்டுத்தர கோரி மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுக்கும் சாந்தனின் தாயார்...!