பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்... சரணடைந்த நபரிடம் போலீஸார் விசாரணை...

பொன்னேரியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்திய நபர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்... சரணடைந்த நபரிடம் போலீஸார் விசாரணை...

அண்மைக்காலமாகவே பெரியார் சிலை மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. செருப்பு மாலை அணிவிப்பது, காவி சாயம் பூசுவதுஉள்ளிட்ட விஷம செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்திய சேதப்படுத்தியது தொடர்பாக செல்லக்கிளி என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதுடன், சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தகவலறிந்தது நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிலையை துணியால் மூடி மறைத்தனர். அத்துடன் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை சேதம் அடைந்தது குறித்து தெரிந்தவுடன் திராவிட கழகத்தினர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.