திமுக நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் கைது...!

திமுக நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் கைது...!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக சமூகவலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவராக உள்ளவர் செல்வராஜ். இவர் குறித்து பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த கோபால் என்கிற ஆட்டோ டிரைவர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் நகர்மன்ற தலைவர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்து நகர்மன்ற தலைவர் செல்வராஜ் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் கோபாலை போலீசார் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றகாவலில் அனுப்பிவைத்தனர்.

இதையும் படிக்க   |  இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து தீவிரம்..! காசா பகுதியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியது இஸ்ரேல்..!