அரசுப் பேருந்தை வழிமறித்து தீக்குளிக்க முயன்ற நபர்.. போதை ஆசாமியின் செயலால் பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு பேருந்தை வழிமறித்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பாண்டி என்ற லிவர் பாண்டி. இவர் அய்யலூர் மேம்பாலம் அருகே சாலையோரம் பூக்கடை நடத்தி வந்தார். அய்யலூரில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்ட போது ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கடைகளை போலீசார் அகற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டி புறக்காவல் நிலையத்தின் மீது அவ்வப்போது கற்களை வீசி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மதுபோதையில் இருந்த பாண்டி திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்றை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அவரை பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தட்டிக் கேட்டபோது பாண்டி அருகிலிருந்த மரகம்பை எடுத்து அரசு பேருந்தை தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் அரசு பேருந்தின் முன்னால் நின்றபடி தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.