தேநீர் அருந்திய இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவலர்..!!

தேநீர் அருந்திய இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவலர்..!!

கோவை ஒண்டிப்புதூரில் தேநீர் அருந்திய இளைஞர்களை காவலர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சசி கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இரவு பணி முடிந்து அப்பகுதியில் உள்ள பேக்கரியில் நின்று தேனீர் அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  சிங்கநல்லூர் காவல் நிலைய உதவி  ஆய்வாளர் பாஸ்கரன், சசி கண்ணன் மற்றும் அவரது நண்பர்களை விசாரித்துள்ளார்.

அப்போது தினமும் இரவு பணி முடிந்து பேக்கரியில் தேநீர் அருந்துவது வழக்கம் என கூறியுள்ளனர். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சசிகண்ணன் மற்றும் அவருடன் இருந்த 12ஆம் வகுப்பு மாணவனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் சசிகண்ணனுக்கு காதில் பலமான அடி விழுந்ததால் துடிதுடித்த அவரை, நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.