திமுக ஆட்சியில் மின்துறை ஒரு போதும் தன்னிறைவு பெறப்போவதில்லை....அர்ஜுன் சம்பத் விமர்சனம்

தமிழகத்தில் நடைபெறக்கூடிய திமுக ஆட்சியில் மின்துறை ஒரு போதும் தன்னிறைவு பெறப்போவதில்லை என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்

திமுக ஆட்சியில் மின்துறை ஒரு போதும் தன்னிறைவு பெறப்போவதில்லை....அர்ஜுன் சம்பத் விமர்சனம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், 

காஞ்சிபுரத்தில் வேண்டுமென்று கிறிஸ்துவப் பள்ளியில் ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவனை கண்டித்த பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்து பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என கூறினார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 356 இடங்களில் பாஜக குறிப்பிட்ட வெற்றி பெற்றுள்ளதால் இந்த வெற்றியின் மூலம் மாநகராட்சி நகராட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய அவர்  மின்வாரிய துறையில் திமுக மேற்கொள்ள இருந்த ஊழலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் தடுத்து நிறுத்தியுள்ளார் இதனால் திமுகவினர் தமிழகத்தில் ஒரு போதும் மின் துறையில் தன்னிறைவு பெறாமல் மின்சாரத்தை கொள்முதல் செய்து வரும் சூழலே ஏற்படுமென அவர் விமர்சித்தார்...