மீண்டும் உயர்ந்தது சமையல் கேஸ் விலை... ரூ. 15 அதிகரித்து ரூ.915.50க்கு விற்பனை...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 15 ரூபாய் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உயர்ந்தது சமையல் கேஸ் விலை... ரூ. 15 அதிகரித்து ரூ.915.50க்கு விற்பனை...

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்க ஆரம்பித்தது முதல் அதன் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அடிக்கடி உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் மாதம் 875 ரூபாயாகவும், கடந்த மாதம் 900 ரூபாயாகவும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று சமையல் சிலிண்டர் விலை மீண்டும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 915 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதன்படி, சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று முதல் 915 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவது மக்களை சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.