முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்....அண்ணாமலை குற்றச்சாட்டு...!!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டுகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். பின்னர் மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,
பழனி முருகன் கோவில் பாலாலயம் நடைபெற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்றும், கடந்த 15-ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத நிலையில் ஆகமவிதிகளின் படி விரைவில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டுகள், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுகிறது என்றும், இருந்தாலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகுதான் அதன் உண்மைத்தன்மை தெரியும் என தெரிவித்தார்.