கள்ளக்காதல் விவகாரத்தால் தற்கொலை செய்த மகன்...  நெஞ்சை உலுக்கிய தந்தையின் கதறல்...

மகன் இறந்துவிட்டதை கேள்விப்பட்ட தந்தை சாலை முழுவதும் கூக்குரலிட்டு சென்ற சம்பவம்  பார்ப்போர் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது. 

கள்ளக்காதல் விவகாரத்தால் தற்கொலை செய்த மகன்...  நெஞ்சை உலுக்கிய தந்தையின் கதறல்...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னான்டப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தசராஜி  மகன் வேங்கையன் என்கிற பிரேம்குமார்.

எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோமளா என்பவருடன் திருமணமாகியுள்ளது. இந்நிலையில் பிரேம் குமாருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரேம்குமார் இருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்த கடையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற கிராமிய காவல் உதவி ஆய்வாளர் பரிசோதித்து பார்க்கையில் உடலில் லேசான உயிர் இருப்பதை அறிந்து 108 ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல்   காவல் வாகனத்திலேயே பிரேம்குமாரை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் பிரேம்குமார் வருகின்ற வழியிலேயே இறந்துவிட்டதாக கூறிய நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

பின்பு திருப்புத்தூர் கிராமிய காவல்துறை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் மகன் இறந்துவிட்ட தகவலை கேள்விப்பட்ட பிரேம் குமாரின் தந்தை தசராஜி நீண்ட தூரம் சாலையில் கத்தி கதறி ஒப்பாரி வைத்தபடியே அரசு மருத்துவமனையை நோக்கி வந்த சம்பவம் பார்ப்போர் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.