"பொய்யி.. பொய்யி".. 5ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு உண்டாம் பா - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 5ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நடைபெறாது என்று வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

"பொய்யி.. பொய்யி"..  5ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு உண்டாம் பா - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடைபெறாது என்று வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதைப் போல், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கட்டாய்க்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கு கட்டாயத்தேர்ச்சி அடிப்படையில் தேர்வு பெறுவார்கள்.