கல்குவாரி குட்டையில் கால் தவறி விழுந்த மகன் : காப்பாற்ற போன தாயும் பலியான பரிதாபம்!!

கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றபோது கால் தவறி விழுந்த மகனும், அவரை காப்பாற்ற போன தாயும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரி குட்டையில் கால் தவறி விழுந்த மகன் : காப்பாற்ற போன தாயும் பலியான பரிதாபம்!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கும்பி குளம் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய் மகன் நீரில் மூழ்கி பலி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பி குளம் ஊரைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது மகன் 11 வயது மகன் சுபாஷ். இருவரும் அருகில் கும்பி குளம் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது சுபாஷ் கால் தவறி நீரில் விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன பேச்சியம்மாள் தனது மகனை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்துள்ளார். அப்போது மூச்சுத்திணறி பேச்சியம்மாளும், அவரது மகனும் மூச்சுத் திணறி இறந்துவிட்டனர்

இந்நிலையில் குளிக்கச் சென்ற பேச்சியம்மாளும் அவரது மகனும் வராததால் அவரது உறவினர்கள் கல்குவாரி குட்டைக்கு சென்றனர். உடைகள் மட்டும் கரையில் இருப்பதை கண்டு அருகில் தேடியும் கிடைக்காததால், நீரில் மூழ்கி இருப்பார்கள் என சந்தேகித்து பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் தேடியுள்ளனர். பேச்சியம்மாளும், அவரது மகன் சுபாஷ் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராதாபுரம் காவல்துறையினர் நேரில் வந்து இறந்த பேச்சியம்மாள் மற்றும் அவரது மகன் சுபாஷ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும் மகனும் ஒரே நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.