புழல் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது...!

சென்னை புழல் ஏரியின் நீர் மட்டம் 17.92 அடியாக குறைந்துள்ளதால், 189 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றம் செய்யப்படும் நிலை உள்ளது.

சென்னையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. அந்த வகையில் 21.20 அடி நீர்மட்டம் இருந்த நிலையில் தற்போது 17. 92 அடியாக குறைந்துள்ளது.

அதே போல் 3,300 மில்லியன் கன அடியாக இருந்த ஏரியின் கொள்ளளவு 2.589 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் நீர் வரத்து 296 கன அடியாக உள்ள நிலையில், பொதுமக்களின் தேவைக்காக 189 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.