ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணிகள் தீவிரம்!

ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணிகள் தீவிரம்!

நெல்லையப்பர் கோவில் கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான அரிய ஓலைச்சுவடிகள் புத்தகமாக்குவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருவதாக இந்து அறநிலைய துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் 42 ஆயிரத்து 20 கோவில்களில் உள்ளது. இதில் உள்ள அரிய பொருட்கள் மற்றும் அரிய ஓலை சுவடிகள் திரட்டப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை உலக தமிழாராச்சி சுவடிகள் துறை பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தலைமையில் குழுவானது நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டது.நெல்லையப்பர் கோவில் பாதுகாத்து வந்த 10 செப்பு பட்டயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு  நெல்லையப்பர் கோவில் 200 ஆண்டுகள் பழமையான அரிய ஓலை சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

இதில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், சைவ சன்னியாசி விஜயம், ஸ்ரீசக்ர பூஜை உள்ளிட்ட 13ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் திருஞானசம்பந்தர் எழுதிய முதல் மூன்று திருமறைகள் அடங்கிய தேவாரப்பாடல்களுக்கான ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளது. 

தோடுடைய செவியன் என்ற பாடல் முதல் ஏட்டில் உள்ளது. 281 ஏடுகள் உள்ள உள்ள இந்த ஓலை சுவடிகள்  சுமார் 200 பழமையான ஓலை சுவடிகள் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல நிலையில் உள்ள இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் தூய்மை செய்து நூலாக மாற்றவும், டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆய்த்த பணிகள் மும்முரமாக இந்து சமய அறநிலை துறையின் ஓலை சுவடிகள் நூலாக்க திட்டப்பணிகள் குழு ஈடுப்பட்டுள்ளது